சுழல் நகர்வுகள்,,,,
தூக்கம்பிடிக்கவில்லைமனோகரிக்கு,புரண்டுபடுக்கிறாள்,மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறாள்,கால்களுக்குள்கையைவைத்தவாறுஇருக்கிக்கொண்டுபார்க்கிறாள். எது செய்தும் பலனினில்லாமல் போகவே எழுந்து அமர்கிறாள், படுத்திருந்த பாயில் நீட்டிக்கொண்டிருந்த சின்னதான கோரைக்குச்சி கால் பாதத்தின் அருகில் குத்தியது., தடவி விட்டவாறே எழப்பார்க்கிறாள், சலனம ற்றஅமைதி, வீடு முழுவதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த மென் இருள், மேற்குப் பார்த்த ஜன்னல் வழியே புகை போல் வந்த வெளிச்சம் லேசாய் திறந்திருந்த ஜன்னல் கிராதியையும் ஜன்னலின் விளிம்பையும் நனைத்துக் கொண்டு வீட்டினுள் புக யத்தனித்தோஅனுமதி கேட்டோ நின்றது ஜன்னல் கிராதியிலிந்து உதிர்ந்த பூ ஒன்றுடன்/ இரவு சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே நின்றது,பிள்ளைகளும் கணவரும் சாப்பிட்டது போக மிச்சமிருந்த சோறில் எண்ணை ஊற்றிசாப்பிட்டாள், நல்லெ ண்னைஇல்லை,கடலெண்ணெய்தான்ஊற்றிக் கொண்டாள்,தொடு கறி எதுவும் இல்லை,எலி கறும்பியது போல் யாரோ தின்று விட்டு வைத்திருந்த அரை தேங்காய்ச்சில்இருந்தது,காலையில்தான்கடையில்வாங்கியிருந்தாள்,கடைக் காரர்தான் சொன்னார்,”சோத்துக்குத் தொட்டுக்க தேங்காய்ச்சி