இடுகைகள்

அனுபவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவினூடாய்,,,

அவரை தோழர் என அழைப்பதா, இல்லை கற்றுத் தந்த ஆசிரியர் என அழை ப்பதா, இல்லை குரு என மனதுக்குள் உருவகித்துக்கொள்வதா,,,? பழைய நாட்கள் அவை/ நினைத்துப்பார்க்கவும் அசை போடவுமாய் இனிக்கும் நினைவுகளை மனம் தடவி வைத்திருந்த பொழுதுகளின் ரசவாதங்கள் துள்ளலாய் நகர்வு கொண்ட நாட்கள், தொண்ணூறுகளின் முற்பகுதி என்கிறதாய் நினைவு/ வழக்கம் போல் பணி முடிந்த மாலை வேளையில் டீகடை ஒன்றில் நின்று கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்குள் இருந்த டீக்குடிக்கும் பழக்கத்தை நண்பர் ஒருவர் இவ்விதமாய் விவரிப்பதுண்டு, “என்ன இது ,டீக்குடிக்கும் முன்னாடி ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக் குடிக்கும் போது ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக்குடித்த பின்னாடி ஒரு டீக் குடிக்கிறீங்க,என்பார், அவரது பேச்சிறிக்கு பெரும்பாலுமாய் பதிலேதும் சொல்லாமல் நகர்கிற நாட் கள் ஒன்றில்தான் தோழர் மாரிக்கனி அவர்களுக்கும் எனக்குமான சந்திப்பு நிகழ்கிறது குறிப்பிட்ட இடமொன்றின் சூழ் கொண்ட சூழலில், அப்பொழுதெல்லாம் இன்று போல் செல் போன் கிடையாது, லேண்ட் லைன் போனே அலுவலகங்களில் மட்டுமே காணக் கிடைக்கிற பாக்கியம். அதுவும் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும் பேசிக்கொள்ள...

சுழல் நகர்வுகள்,,,,

படம்
தூக்கம்பிடிக்கவில்லைமனோகரிக்கு,புரண்டுபடுக்கிறாள்,மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறாள்,கால்களுக்குள்கையைவைத்தவாறுஇருக்கிக்கொண்டுபார்க்கிறாள். எது செய்தும் பலனினில்லாமல் போகவே எழுந்து அமர்கிறாள், படுத்திருந்த பாயில் நீட்டிக்கொண்டிருந்த சின்னதான கோரைக்குச்சி கால் பாதத்தின் அருகில் குத்தியது., தடவி விட்டவாறே எழப்பார்க்கிறாள், சலனம ற்றஅமைதி, வீடு முழுவதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த மென் இருள், மேற்குப் பார்த்த ஜன்னல் வழியே புகை போல் வந்த வெளிச்சம் லேசாய் திறந்திருந்த ஜன்னல் கிராதியையும் ஜன்னலின் விளிம்பையும் நனைத்துக் கொண்டு வீட்டினுள் புக யத்தனித்தோஅனுமதி கேட்டோ நின்றது ஜன்னல் கிராதியிலிந்து உதிர்ந்த பூ ஒன்றுடன்/ இரவு சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே நின்றது,பிள்ளைகளும் கணவரும் சாப்பிட்டது போக மிச்சமிருந்த சோறில் எண்ணை ஊற்றிசாப்பிட்டாள், நல்லெ ண்னைஇல்லை,கடலெண்ணெய்தான்ஊற்றிக் கொண்டாள்,தொடு கறி எதுவும் இல்லை,எலி கறும்பியது போல் யாரோ தின்று விட்டு வைத்திருந்த அரை தேங்காய்ச்சில்இருந்தது,காலையில்தான்கடையில்வாங்கியிருந்தாள்,கடைக் காரர்தான் சொன்னார்,”சோத்துக்குத் தொட்டுக்க தேங்காய்ச்சி...

பூவாகி காயாகி,,,,,

படம்
கோழி கிளறியதும் நல்லதாகவே ஆகிப்போகிறது.சனிக்கிழமை அலுவலகம் முடிந்து பசியோடு வீட்டுக்கு வந்த மதியவேளையில் வீட்டின் பக்கவாட்டு வெளியில் கூட்டிக்குவிக்கப்பட்டிருந்த குப்பை கிளறப்பட்டு வேப்பமரத்திலை களும், பன்னீர்மரப்பூக்களுமாய் காட்சியளிக்கின்றன.  இரண்டுநாட்களாய்கூட்டிக்குவிக்கப்பட்டிருந்தகுப்பையின்குவியல்அது. வீட்டி னுள்ளே அன்றாடம் கூட்டி அள்ளிய தூசியும், இரண்டும்,இரண்டும் நான்கு மாய் நின்ற வேப்ப மரங்களிலிருந்தும்,பன்னீர் மரங்களிலிருந்தும் உதிர்ந்த இலைகளையும்,பூக்களையும் சேர்த்து குப்பையாய்க்கூட்டி தீ வைத்து எரிக்கும் முன்பாக இப்படி ஆகிப்போகிறது.  கால்நகங்களில்வலுவுள்ளகோழிகள்நான்குவந்துஇப்படிசெய்துவிட்டுப்போயி ருக்கிறது. சேவல்கள் இரண்டு, கோழிகள் இரண்டு போனால் போகிறதெனகூட வளரிளம் பருவத்தில் இருக்கிறகுஞ்சு ஒன்று. கருப்பும், வெள்ளையும், ப்ரெவுனுமாய் நடமிட்டு வருகிற அவைகள் சற்றே மிரட்டலாய்த்தான் தெரிகின்றன இந்த விஷயத்தில். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாய் காலையிலும்,மாலையிலும்,மற்றும் இரவி லுமாக பெய்தமென் தூறல்,அதில் நனைந்து போயிருந்த குப்பை,இதை இப்போ தை...